மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - உடலை வாங்க மறுத்த போராட்டம்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி - உடலை வாங்க மறுத்த போராட்டம்

திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனியில் உள்ள வீடு ஒன்றில் மராமத்து பணி செய்து கொண்டிருந்த ரீகன் என்ற கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார். மேலும் இரண்டு தொழிலாளி படுகாயம் அடைந்துள்ளனர். 

உயர் மின்சார கம்பிகளுக்கு கீழ் வீடு கட்ட முறைகேடாக கட்டிட அனுமதி வழங்கிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மின் இனைப்பு வழங்கிய மின்வாரிய அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், 4 பெண் குழந்தைகளுக்கு தந்தையான தொழிலாளி ரீகன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்கு, 

குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ரீகன் உடலை வாங்க மறுத்து CPI (M) மற்றும் உறவினர்கள் சார்பில் அரசு மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision