திருச்சியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து

திருச்சியில் மின்கசிவு காரணமாக வீட்டில் தீ விபத்து

திருச்சி பொன்மலைப்பட்டி அடைக்கல அன்னை நகர் கிழக்கு 2வது தெருவில் வசித்து வருபவர் ஜெயராமன். இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவர் வீட்டின் பூஜை அறையில் மின்கசிவு ஏற்பட்டு அங்கிருந்த பொருட்களில் தீப்பற்றியது.

இதுகுறித்து உடனடியாக கண்டோன்மென்ட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் பொருட்கள் குறைவாக இருந்ததால் தீ மற்ற இடங்களில் பரவாமல் பூஜை அறை மற்றும் சமையல் அறையில் மட்டும் பரவி அங்கிருந்த பொருட்கள் எரிந்தது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த தீயை அணைத்தனர்.

மேலும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பார்த்த பொழுது தீ முழுவதும் அணைக்கப்பட்டிருந்தது. இந்த மின்கசிவு காரணமாக பூஜை பொருட்கள் மற்றும் சமையல் அறையில் இருந்த பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்தது. இதுகுறித்து பொன்மலைப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.co/nepIqeLanO