225 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா- அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்

225 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா- அமைச்சர் கே.என் நேரு வழங்கினார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 25 ஆவது வார்டு,  வயலூர் சாலை, உய்யக்கொண்டான் பாலம் அருகில். திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 225 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று (6.6.22) வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், ஆர்.வைத்திநாதன்,  சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம். பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO