மனிதநேய வளர்ச்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு வார விழா

மனிதநேய வளர்ச்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு வார விழா

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவுறுத்தலின் படி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
முதல்வர் முனைவர் சு.விஐயலெட்சுமி
தலைமையில் திருச்சி பெரியமிளகுபாறை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் மனிதநேய வளர்ச்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு வார விழா சிறப்பாக நடத்தப்பட்டது. 

பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் சிறப்புரை ஆற்றினார். முதல்வர் தன் உரையில் மனிதநேயத்துடன் அனைவரையும் அரவணைத்து தீண்டாமை ஒழிப்புக்கு எதிராக செயல்பட்டு அனைவரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அப்பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். கல்லூரி மாணவ மாணவிகளும் தேச ஒற்றுமை பற்றி  கலைநிகழ்ச்சி நடத்தினர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn