கருமுட்டை விவகாரம் உரிய நடவடிக்கை புதியதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

கருமுட்டை விவகாரம் உரிய நடவடிக்கை புதியதாக பொறுப்பேற்ற திருச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த சு.சிவராசு கோயம்புத்தூர் வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்ட மா.பிரதீப்குமார் இன்று மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கொண்டார்.

பின்னர் புதிய மாவட்ட ஆட்சியருக்கு அரசு அதிகாரிகள், ஆட்சியராக அலுவலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்... மக்கள் குறைதீர் கூட்டத்தில் வரும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும், விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, குடிநீர், சாலை வசதி மேம்பாடு மற்றும் தெருவிளக்குகள் சிறப்பான முறையில் இயங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் மோசமானதை அடுத்து விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் துரித நடவடிக்கை மேற்கொள்வேன் எனவும், பட்டா மாறுதல் தொடர்பான காலதாமதத்தை, சிரமங்களை போக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் அதேநேரம் கருமுட்டை விவகாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான எந்த விவகாரத்திலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புதிதாக பெற்றுள்ள மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO