திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர் மூளைச்சாவா? பரிதாபம்

திருச்சி மாவட்ட காவல் ஆய்வாளர் மூளைச்சாவா? பரிதாபம்

திருவெறும்பூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பிரியா சாலை விபத்தில் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி சேர்ந்தவர் பிரியா இவர் கடந்த 2003ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு தற்போது இன்ஸ்பெக்டராக திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 7ம் தேதி திருச்சி மத்திய சிறையில் கண்காணிப்பு பணி முடிந்து வீட்டிற்கு பஸ்ஸில் சென்றுள்ளார் அப்படி சென்றவர் பஸ்ஸிலிருந்து இறங்கி வீட்டிற்கு செல்வதாக தனது கணவரின் இரு சக்கர வாகனத்தில் சென்ற பொழுது சாலையில் இருந்த ஸ்பீடு பிரேக்கரில் இருசக்கர வாகனம் சென்ற பொழுது தவறி கீழே விழுந்ததில் பிரியா பலத்த காயமடைந்தார்

அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரியா அவர்கள் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித் துள்ளது.#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision