தமிழ்நாட்டில் தமிழை அழித்தது திமுக தான் - எச். ராஜா

தமிழ்நாட்டில் தமிழை அழித்தது திமுக தான் -  எச். ராஜா

மருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் பாஜக சார்பில் ஜம்மு தீவு பிரகடன நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார் நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எச். ராஜா

தமிழ்நாட்டில் இந்து விரோத அரசு செயல்பட்டு வருகிறது.திருச்சியில் நடந்த விசிக பேரணியில் சிஏஏ சட்டத்திற்கு எதிராகவும் 370 சட்டப்பிரிவு குறித்தும் பேசப்பட்டது. இது நாட்டிற்கு எதிரானது நாட்டிற்கு எதிராக பேசுபவர்களுக்கு பேரணி நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்து விரோதம் தேசவிரோதம் இரண்டும் ஒன்றுதான்.தமிழக அரசு இந்து விரோத தேச விரோத போக்கை

கைவிட வேண்டும் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் நிறுத்தப்படுவீர்கள்.நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என முதலமைச்சர் கூறுவதை வரவேற்கிறேன்ஆனால் இத்தனை ஆண்டுகளாக ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த அவர்கள் அதை ஏன் செய்யவில்லை.தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின்பு உயர்கல்வியில் தமிழ் கொண்டுவரப்படும்.திருமாவளவன் நைனார்

நாகேந்திரன் சந்தித்துக்கொண்டது அரசியல் ரீதியாக அல்ல தனிப்பட்ட ரீதியான நலம் விசாரிப்பு மட்டுமே. நானும் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை எதிர்த்து பேசுகிறேன் நான் எதிர்த்து பேசுவது அவர்களுடைய கொள்கைதான் தனிப்பட்ட முறையில் அவர்களை சந்தித்தால் நலம் விசாரிப்பேன்.

இன்று அரசியலுக்காக தமிழ் ஸ்டெண்ட்டை முதலமைச்சர் செய்கிறார். திமுக அரசு 1967இல் ஆட்சி அமைப்பதற்கு முன்பாக ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக இருந்தது இன்று மருத்துவர்கள் பொறியாளர்கள் என உயர் பதிவில் இருக்கும் யாருக்கும் தமிழ் எழுதத் தரவில்லை அதற்கு காரணம் திமுக தான்.

குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள கூடாது என முதன் முதலில் கூறியவர் ராமகோபாலன். இன்று முதல்வர் அதையே கூறுகிறார் இது தான் பின் புத்தி.தமிழகம் பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் சேராததால் தான் அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. மற்ற நிதிகள் வழங்கப்பட்டது.கள் இறக்குவது குறித்து சீமான் வைக்கும் கோரிக்கை சரி தான். பா.ஜ.க வும் அதை நீண்ட காலமாக செய்து வருகிறது.

திமுக அரசின் அடிப்படையே ஊழல் தான் அதனால் தான் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு கள் இறக்க அனுமதி வழங்கப்படவில்லை.சேகர் பாபு ஒரு மூதேவி அவர் என்ன பேசினால் எனக்கென்ன? என்று எச் ராஜா கூறினார் 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision