அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த விஏஓ தாயாரிடம் நகை திருட்டு

அரசு மருத்துவமனை சிகிச்சையில் இருந்த விஏஓ தாயாரிடம் நகை திருட்டு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஐஸ்வர்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிக்கோலஸ். இவரது மனைவி டெஸ்ட்டிமோனா. இவர் ஆலங்குடி மகாஜனம் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஈசபெல்லா ராணிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மகள் தாயை லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் இசபெல்லா ராணி அணிந்திருந்த இரண்டு பவுன் நகையை மர்ம ஆசாமிகள் ஆஸ்பத்திரியில் வைத்து திருடி விட்டனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் லால்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் பெண்ணிடம் நகை திருடப்பட்ட சம்பவம் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த திருட்டு சம்பவம் குறித்து லால்குடி போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn