ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கருங்குளம் - வாடிவாசலில் காளைகள்

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் கருங்குளம் - வாடிவாசலில் காளைகள்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் சனிக்கிழமை காலை புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் இந்த பகுதியை சுற்றிய கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

இங்குள்ள பகுதியில் வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை புத்தாண்டு தினத்தன்று இந்த ஆலயத்திற்கு அழைத்து வந்து அங்கு அவைகளுக்கு புனித நீர் தெளித்து பங்குதந்தையால் பிராத்தனை செய்யப்பட்டு, அவைகளுக்கு ஆலய பிரசாதமான பச்சரிசி, வெல்லம், கொண்டைக்கடலை, கம்பு, எள், பொட்டுக்கடலை ஆகியற்றின் கலவை அளிக்கப்படுகிறது.

நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் ஆலயத்திற்கு காலை முதல் வர தொடங்கிய நிலையில், ஆலயத்திற்கு பிராத்தனைக்காக அழைத்து சென்று அங்கு வழிபாடு முடிந்த நிலையில் வெளியே வரும் காளைகள் பொதுமக்களின் கூட்டத்தையும், விசில் ஒலியையும் கண்ட மந்தையில் பொதுமக்களுடன் விளையாட தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும் காளைகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டப்பட்டு வளர்ப்பாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. காளை பிரியர்கள் அவைகளை வரவேற்க அளிக்கப்பட விசில் ஒலியும் காளைகளை குஷிப்படுத்தியதால் அவைகள் துள்ளிக்குதித்து மக்களுடன் விளையாட தொடங்கியதும் அப்பகுதி முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/LFNwwZ6K29zAPpD8WoDIQc

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn