தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய விண்ணப்பிக்க கடைசி நாள்- திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய விண்ணப்பிக்க கடைசி நாள்- திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வருகின்ற 04.11.2021 அன்று தீபாவளிப் பண்டிகை
கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதிய தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக்கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடிமருந்து சட்டம் மற்றும் விதிகள் 2008 -க்குட்பட்டு, உரிய ஆவணங்களுடன் 30.09.2021-க்குள் விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

30.09.2021-க்குப் பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட 
மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn