திருச்சியில் தொடங்கியது ஆயுள் ஹாஸ்ப்பிகேர் மருத்துவ சேவை - தனிநபர்களுக்கு சிகிச்சையுடன் கூடிய பராமரிப்பு மையம்!!

திருச்சியில் தொடங்கியது ஆயுள் ஹாஸ்ப்பிகேர் மருத்துவ சேவை - தனிநபர்களுக்கு சிகிச்சையுடன் கூடிய பராமரிப்பு மையம்!!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆயுள் ஹாஸ்ப்பிகேர் மருத்துவ சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவ மற்றும் பராமரிப்பு சேவையில் தனிப்பட்ட மனிதர்களுக்கு தேவையான அதிமுக்கியமான தினசரி சேவைகளான மருத்துவ சேவைகளுடன் வாழ்வியல் உறுதுணை சேவை, உணர்வுபூர்வமான ஆதரவு சேவைகள், பாதுகாவல் பராமரிப்பு,

அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு, மூத்தோர்களுக்கான தினசரி மருத்துவ பராமரிப்பு, இவற்றுடன் கூடவே பிஸியோதெரபி, நோய் தடுப்பு சிகிச்சை தடுப்பூசி, இறுதிக்கட்ட பராமரிப்பு என பல்வேறு சேவைகள் வழங்கப்படும்.

இங்கு மேற்கூறிய சேவைகள் மட்டும் இல்லாமல் வெளியூர் செல்லும் போது வீட்டில் தனியாக இருக்கும் வயதானவர்களை பார்த்துக்கொள்ளும் சேவையும் உள்ளது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுடன் தேவையான நாட்கள் இங்கு தங்கவைக்கலாம் என்பதால் பலருக்கும் உபயோகமானதாக இருக்கும். 

ஸ்ரீரங்கம் கிழக்கு ரெங்கநாதபுரத்தில் உள்ள பங்கஜம் மருத்துவமனையில் ஜீவிஎன் ரிவெர்சைடு மருத்துவமனையின் இயக்குனர் மற்றும் மகப்பேறு மருத்துவரான திருமதி கவிதா செந்தில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த இந்த ஆயுள் ஹாஸ்பிகேரில் தனி அறை, இரண்டு பேர் தங்கும் அறை, டீலக்ஸ் அறை மற்றும் பொதுவான அறை, என மொத்தம் 40 அறைகள் உள்ளது.

அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் குழுவுடன், அன்பான செவிலியர்களுடன் தங்கள் குடும்பத்துடன் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision