குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

குழந்தைகள் கண்முன்னே மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி தீரன் நகரை சேர்ந்தவர் காமராஜ் (49) இளையரசி (44). தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உணவகம் நடத்தி வந்தனர். உணவக தொழிலை மேம்படுத்த காமராஜுக்கு பணம் தேவைப்பட்டதால், இளையரசியிடம் காமராஜ் கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதி, மது அருந்திவிட்டு வந்த காமராஜ் மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர் இளையரசியை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், அரிவாளால் அவர் கழுத்தில் வெட்டியதில் படுகாயமடைந்த இளையரசி உயிரிழந்தார்.

இது குறித்த தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த காமராஜை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிந்தில், கொலைக்குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால், 3 மாத சிறை தண்டனையும்,

வரதட்சணை கேட்டு துன்புறுத்திய குற்றத்துக்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனயும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால், 3 மாதம் சிறை தண்டனையை காமராஜு ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision