காதல் விவரகாரம் தனிப்பிரிவு காவலர் திருச்சியில் விஷமருந்தி தற்கொலை. 

காதல் விவரகாரம் தனிப்பிரிவு காவலர் திருச்சியில் விஷமருந்தி தற்கொலை. 

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்பி தனிப்பிரிவு  காவலர் காதல் தோல்வியால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

லால்குடி அருகே புதூர் உத்தமனூரைச்  சேர்ந்தவர் சுரேஷ்(31) இவர் லால்குடி காவல் நிலையத்தில் எஸ்பி தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வருகிறார். இவர்  கல்லக்குடி பகுதியை சேர்ந்த ஆசிரியை ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காதல் தோல்வியால்  ஏற்பட்ட மன விரக்தியடைந்தார்.பின்னர்  பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கியபோது எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

தகவலறிந்த விடுதி ஊழியர்கள் பெரம்பலூர்  அரசு மருத்துமனையில்   முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காவலர் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  இச் சம்பவம் குறித்து சுரேஷ் மாமன் முத்தையா பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn