மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் - அரசு மருத்துவமனை சார்பாக இறுதி அஞ்சலி

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்பு தானம் - அரசு மருத்துவமனை சார்பாக இறுதி அஞ்சலி

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இம் மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த 19வது நபர் ஆவார்.

சென்னை மாவட்டம், கொடங்கையூரைச் சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க ஆண், தலையில் அடிபட்டு, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று மாலை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் அவருடைய உறுப்புகளான சிறுநீரகங்கள், கண்கள், மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.

Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 41 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு இன்று இம்மருத்துவமனை முதல்வர் அர்ஷியா பேகம் தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழு மூலம் இந்த அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெயபிரகாஷ் நாராயணன் மற்றும் குழுவினர்,

சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் நூர்முகமது, மற்றும் குழுவினர், மயக்கவியல் மருத்துவர் சந்திரன் மற்றும் குழுவினர் மற்றும் செவியலியர் குழு, செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக, மாற்று சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 32-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது. இரண்டு கண்விழிகளும் இம்மருத்துவமனையில் இரண்டு பயனாளிகளுக்கு தானமாக வழங்க பெறப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மருத்துவமனை சார்பாக இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision