கொள்ளிடம் ஆற்றில் குளித்து மூழ்கிய சிறுவர்களை தேடும் எம்.எல்.ஏ

கொள்ளிடம் ஆற்றில் குளித்து மூழ்கிய சிறுவர்களை தேடும்  எம்.எல்.ஏ

திருச்சி ஸ்ரீரங்கம், பஞ்சகரை யாத்திரிக நிவாஸ் எதிர்புறம் உள்ள கொள்ளிடம் ஆற்றில் ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு ஸ்ரீமான் பட்டர் குருகுலத்தில் தங்கி படித்து வந்த 4 மாணவர்கள் நேற்று (14.05.2023) காலை சுமார் 6.00 மணியளவில் குளிக்க சென்ற போது நீச்சல தெரியாத காரணத்தினால் தண்ணிரில் முழ்கினர்

இதில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (14) என்ற மாணவன் இறந்துவிட்டர். இன்று காலை 11:15 மணிக்கு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ஹரிபிரசாத் என்ற மாணவன் உடல் மீட்கப்பட்டது.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அபிராம் என்ற சிறுவனை நேற்று முதல் இன்றும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். மேற்படி சிறுவனை தேடும் பணியினை சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மற்றும் ஸ்ரீரங்கம் பவருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் மேற்பார்வைசெய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn