கல்லூரி மாணவர்களை அவதூறாக பேசிய நபர் குண்டர் சட்டத்தில்  கைது

கல்லூரி மாணவர்களை அவதூறாக பேசிய நபர் குண்டர் சட்டத்தில்  கைது

கடந்த 14.11.22-ந்தேதி புத்தூர் நான்கு ரோடு அருகில், ஹோட்டலில் உணவருந்த வந்த நபரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.850/- பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காந்திமார்க்கெட் உப்பிலியதெருவை சேர்ந்த எதிரி புலிதேவன் வயது என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி புலிதேவன் மீது சமையல் வேலை செய்பவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக ஒரு வழக்கும், 5 அடிதடி வழக்குகளும், கத்தியை காண்பித்து பணம் பறித்ததாக 2 வழக்குகள் உட்பட 9 வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவருகிறது.

எனவே, எதிரி புலிதேவன் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அடிதடியில் ஈடுபடுவதும், பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பது என குற்றசெயல்களை தொடர்ந்து செய்பவர் என விசாரணையில் தெரியவருவதால், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன்,  மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

  

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO