ரூ.18 லட்சம் மதிப்புள்ள இரண்டு டிராக்டர்கள் திருடிய நபர் கைது

ரூ.18 லட்சம் மதிப்புள்ள இரண்டு  டிராக்டர்கள் திருடிய நபர் கைது

கடந்த 28.05.22-ந்தேதி தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உழவர் சந்தை பகுதியில் கோமதீஸ்வரன் என்பவருக்கு சொந்தமான TN 57 BL 9751 (மதிப்பு ரூ.10லட்சம்) என்ற எண் கொண்ட டிராக்டரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணவில்லை எனவும், கடந்த 23.06.22ந் தேதி அதே பகுதியில் மதியழகன் என்பவருக்கு சொந்தமான TN 81 U 7035 (மதிப்பு ரூ.8லட்சம்) என்ற எண் கொண்ட டிராக்டரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை காணவில்லை என பெறப்பட்ட இரண்டு புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, புலன்விசாரணையில் சந்தேகநபர்களின் நடவடிக்கையை தீவிரமாக கண்காணித்தும், சந்தேக நபர்களின் அலைபேசி எண்களின் விபரங்களை சேகரித்தும், திருச்சி மாநகரம் முழுவதும் CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

விசாரணையில் எதிரி விஸ்வநாதன் என்பவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்ததில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதை ஒப்புக்கொண்டார். உடனடியாக எதிரியை கைது செய்தும், வழக்கு சொத்தான 2 டிராக்டர்கள் (மதிப்பு ரூ.18 லட்சம்) கைப்பற்றப்பட்டு, எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

மேற்கண்ட வழக்கில் சிறப்பாக பணியாற்றி துரிதமாக புலன்விசாரணை செய்து எதிரியை கைது செய்த காவல் உதவி ஆணையர் தில்லைநகர் சரகம், தில்லைநகர் காவல் ஆய்வாளர் மற்றும் புலன் விசாரணையில் துணையாக இருந்த காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், வெகுவாக பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.co/nepIqeLanO