அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என் நேரு தீவிர பிரச்சாரம்

அருண் நேருவை ஆதரித்து  அமைச்சர் கே.என் நேரு தீவிர பிரச்சாரம்

Qதமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் பிரச்சாரத்திற்கு இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் அருண் நேரு பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் தி.மு.க முதன்மை செயலாளரும் அருண் நேருவின் தந்தையுமான கே.என்.நேரு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்... மாநில அரசு நிதி மட்டுமின்றி மத்திய அரசிடமிருந்தும் அதிக நிதி பெற்று அனைத்து திட்டங்களும் செயல்படுத்த அருண் நேருவிற்கு வாக்களியுங்கள். நீங்கள் உத்தரவிடுங்கள் நாங்கள் பணியாற்றுகிறோம் என்றார்.

தொடர்ந்து லால்குடி ரவுண்டானா பகுதியிலிருந்து இருசக்கர வாகனங்களின் பிரச்சார பேரணி தொடங்கியது. தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், குளித்தலை, பெரம்பலூர் ஆகிய 5 தொகுதிகளிலும் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision