பெரியார் நினைவு தினம் - அமைச்சர் கே.என் நேரு, கி .வீரமணி மாலைஅணிவித்து மரியாதை

பெரியார் நினைவு தினம் - அமைச்சர் கே.என் நேரு, கி .வீரமணி மாலைஅணிவித்து மரியாதை

திருச்சியில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திராவிடக் கழகத் தலைவர் வீரமணி, கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.ன்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் எம்எல்ஏக்கள் சௌந்தர பாண்டியன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, டோல்கேட் சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் முத்து செல்வம், விஜயா ஜெயராஜ் , லால்குடி நகரத் தலைவர் துரை மாணிக்கம், புத்தூர் தர்மராஜ்பகுதி செயலாளர்கள்

மோகன்தாஸ், இளங்கோ, ராம்குமார், போட்டோ கமால் மற்றும் கழக நிர்வாகிகள் கலைச்செல்வி தனசேகர், ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையா துரைராஜ் கதிர்வேல் சண்முகநாதன் சக்திவேல், தர்மசேகர் முத்துமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH 

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO