மிஸ்டு கால் - இளம்பெண் பலாத்காரம் - மூவர் கைது

மிஸ்டு கால் - இளம்பெண் பலாத்காரம் - மூவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், சரளபட்டியைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க பெண் காந்தி நகரில் உள்ள பத்தி தயாரிக்கும் இடத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். வேலைக்கு வந்த பொழுது வேலூரைச் சேர்ந்த ஒரு ஆண் இவரது மொபைலுக்கு மிஸ்டு கால் கொடுத்துள்ளார். இந்த மிஸ்டு கால் பழக்கமானது நாளடைவில் காதல் ஆகி அந்த நபருடன் இந்த பெண் கடந்த 1ஆம் தேதி வீட்டை விட்டு சென்றுள்ளார்

இதனை தொடர்ந்து அந்த ஆண் நபர் இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றுள்ளார். பெங்களூரில் அவருக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள் ரூமில் இந்தப் பெண்ணை தங்க வைத்து உடலுறவு கொண்டுள்ளார். அடுத்த நாள் காலையில் அந்த ஆண் நண்பர் மாயமாய் உள்ளார். ரூமில் இருந்த இரண்டு ஆண்கள் இந்த பெண்ணை கட்டி வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மதம் மாறச் சொல்லி அடித்து கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண்ணை காணவில்லை என தாய் ஜோதி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் பெண்ணின் மொபைல் எண்ணை கொண்டு  மணப்பாறை போலீசார் பெங்களூருவில் இந்த பெண்ணையும் உடனிருந்த ரியாஸ்கான் (32), சதாம் (28) இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதனையெடுத்து இந்த பெண்ணை அழைத்துக் கொண்டு சென்ற வேலூரைச் சேர்ந்த முபாரக் அலி (28) என்ற நபரையும் கைது செய்தனர். மூன்று பேரும் சேர்ந்து இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது அடுத்து மூவர் மீதும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.

மூன்று பேரும் சேர்ந்து இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது அடுத்து மூவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் மூன்று பேரையும், ஆஜர்படுத்தி 19ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn