திருச்சியில் 33 வது மாநில அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி -தேசிய போட்டிக்கு வீரர்களும் தேர்வு

திருச்சியில் 33 வது மாநில அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி -தேசிய போட்டிக்கு வீரர்களும் தேர்வு

திருச்சி வடுகப்பட்டியில் 33 வது மாநில அளவிலான இன் லைன் மற்றும் ரோலர் ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகிறது. 08ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் தமிழகம் முழுவதும் இருந்து 5 மாவட்டங்களை சேர்ந்த ஜீனியர்,சீனியர் பங்கேற்கும் இன்லைன் மற்றும் ரோலர் ஹாக்கி போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

ஆண்கள்,பெண்கள், கலப்பின போட்டிகளில் எந்த மாவட்டத்தை சேர்ந்த அணிகள் மொத்தமாக புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளனவோ அவர்கள் சாம்பியன்ஷிப் கோப்பை வெல்வார்கள். மேலும் மிக முக்கியமாக வடுகப்பட்டி மைதானத்தில் தேசிய அளவிலான ரோலர் ஹாக்கி போட்டி வருகிற டிசம்பர் மாதம் சண்டிகிரில் நடைபெற உள்ளது. அதற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெறுகிறது. தமிழக அணிக்கு வீரர்கள் பங்கேற்க இத்தேர்வும் நேரடியாக நடைபெறுகிறது. ஏராளமான பெற்றோர்கள் பொதுமக்கள் இப்போட்டினை ஆரவாரத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision