நின்று கொண்டு பயணித்த பயணிகள் அபராதம் கட்டிய நடத்துனர்

நின்று கொண்டு பயணித்த பயணிகள் அபராதம் கட்டிய நடத்துனர்

கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், கிருமி நாசினியை பயன்படுத்த வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணிக்கக் கூடாது என கட்டுப்பாடு விதித்துள்ளது.

இதுமட்டுமின்றி உணவகங்கள், வணிக வளாகங்களில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தும், மீறுபவர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிவுறுத்தலின்படி விமான நிலைய சோதனைச்சாவடியில் காவல் உதவி ஆணையர் அப்துல் கபூர் தலைமையில் சோதனை செய்தனர். அப்போது வந்த தனியார் பேருந்தில் சமூக இடைவெளியின்றி அதிக பயணிகளை ஏற்றி வந்த பேருந்து நடத்துனரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அபராதம் விதித்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu