தூய்மையான நகரங்களை நோக்கி மக்கள் இயக்கத்தினர் மரக்கன்று நட்டு தூய்மை பணி

தூய்மையான நகரங்களை நோக்கி மக்கள் இயக்கத்தினர் மரக்கன்று நட்டு தூய்மை பணி

திருச்சி தென்னூர் சிவப்பிரகாசம் சாலையில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு சிலை அருகே தூய்மையான நகரங்களை நோக்கி மக்கள் இயக்கத்தினர் ஒன்று கூடி அங்குள்ள  உய்யகொண்டான் கால்வாயில் அமைந்துள்ள நடைபாதையினை தூய்மை செய்தும் படித்துறையை தூய்மை பணி நடைபெற்றது. 

அதே வேளையில் அங்கு தொடங்கி சைக்கிள் பேரணி ஒன்று சிவப்பிரகாசம் சாலை வழியாக சாஸ்திரிரோடு சென்று தில்லை நகர் மெயின் ரோடு வழியாக , புத்தூர் நால் ரோடு ஈ .வி. ஆர் சாலை வழியாக செட்டிபாலத்தைத் தாண்டி மீண்டும் ஜல்லிக்கட்டு சிலையை வந்து அடையும் நிகழ்வும், தொடர்ந்து மரக்கன்றுகள் நடும் விழாவும்  நடைபெற்றது. 

ஜல்லிக்கட்டு சிலை அருகில் ஒன்று கூடி இன்றைய நிகழ்வை சிறப்பித்து தந்தமைக்கு மாநகராட்சி சார்பாகவும் , மண்டலம் 5 கோட்டத் தலைவர் , மாமன்ற உறுப்பினர்கள்  மற்றும் அலுவலர்கள் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO