வளர்ச்சி திட்ட பணிகள்- ஆட்சியர் நேரில் ஆய்வு

வளர்ச்சி திட்ட பணிகள்- ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றியம், மாடக்குடி ஊராட்சி, வி.துறையூர் கிராமத்தில், பெருவளை

வாய்க்காலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள சிறு பாலத்தின் கட்டுமானப் பணி, பள்ளிவிடை கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டடத்தின் கட்டுமானப் பணி, மருதூர் ஊராட்சியில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டடத்தின் கட்டுமானப் பணி, கீழப்பெருங்காவூர் ஊராட்சியில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, பருவ மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக இலால்குடி வட்டம், நகர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, அகலங்க நல்லூர் அரசு தொடக்கப்பள்ளி, பூவாளுர் கிழக்கு அரசு உயர்நிலைப்பள்ளிகள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில், இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் ச.வைத்தியநாதன், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாடக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சரஸ்வதி அண்ணாதுரை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO