திருச்சியில் நெல் அரவை ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை

திருச்சியில் நெல் அரவை ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை

திருச்சி நெல் அரவை ஆலைகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என போலீசார் திடீர் சோதனை குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சுதர்சன் மற்றும் காவல் ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் அடங்கிய குழுவினர் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள ரேசன் அரிசிக்கான நெல் அரவை செய்யும் ஆலைகளை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து வரும் நெல் தரமாக வருகிறதா அரிசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் அரிசி தரமாக இருக்கிறதா என பார்வையிட்ட ஆய்வு செய்தனர். மண்ணச்சநல்லூர் பகுதி மட்டும் நான்கு ஆலைகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் துறையூர், மணப்பாறை அதன் தொடர்ச்சியாக சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஆலைகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்த சோதனையில் குறிப்பிடத்தக்க எந்த முறை கேடுகளும் கண்டுபிடிக்கவில்லை என்றும், இந்த சோதனை விவரங்கள் காவல்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆக்குழுவினர் தெரிவித்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO