காவிரி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பூஜை

காவிரி ஆற்றின் குறுக்கே புதிய உயர்மட்ட பாலம் கட்டுமான பூஜை

திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் வகையில் ஏற்கனவே இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976 ஆம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. இதனிடைய திருச்சி - ஸ்ரீரங்கம் இடையே வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு தற்போது உள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் திட்டமிட்டு அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இப்பபாலத்திற்கான நிர்வாக ஒப்புதல் அரசிடம் அனுமதி பெறப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு காண்ட்ராக்டர் எஸ் டி இன்பிராக்கு பணி ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய பாலம் தற்போதுள்ள பாலத்துக்கு மேற்கு புறத்தில் திருச்சி மேல சிந்தாமணியில் இருந்து மாம்பழச்சாலை வரை 5045 மீட்டர் நீளத்துக்கு 1.5 மீட்டர் அகலம் உள்ள நடைபாதையுடன் சேர்ந்து 17 புள்ளி 75 மீட்டர் அகலத்தில் நான்கு வழித்தலங்களுடன் அமைகிறது. இதற்கான ரூபாய் 16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலம் கட்டுமானத்துக்கு ரூபாய் 68 கோடியும் நில அளவை ஆர்ஜிதத்துக்கு ரூபாய் 30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தவிர அணுகு சாலைகள் ரவுண்டானா கட்டுமானம் மின் வசதி மின் கம்பங்கள் உள்ளிட்ட வகைகளை மாற்றுதல் உள்ளிட்டவைகளுக்காக மீதி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்ப பாலப்பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா அமைச்சர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று பூமி பூஜை நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இனிகோ இருதயராஜ் மற்றும் மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision