திருச்சியில் மும்முரமாக நடைபெற்ற தபால் வாக்குபதிவு

திருச்சியில் மும்முரமாக நடைபெற்ற தபால் வாக்குபதிவு

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்டரங்கில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்கள் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மையத்தில் வேட்பாளர்கள் / முகவர்கள் முன்னிலையில் இன்று (13.04.2024) தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில் இம்மையத்தில் வாக்குச்சாவடி மையம் போன்றே வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர்கள் வாக்குப்பதிவு செய்பவர்கள் விரலில் அழியா மை வைத்து அதன்பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதனடிப்படையில் நேற்று (12.04.2024) திருச்சிராப்பள்ளி மாநகர காவலர்கள் மற்றும் பறக்கும்படை. நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்கள் என 1743 நார்கள் தங்களது தபால் வாக்கினை பதிவு செய்தனர். இன்று (13.04.2024) நடைபெற்ற தபால் வாக்குப்பதிவில் 1545 நபர்கள் தங்களது வாக்குகளை -- திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்கள் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கான பெட்டியிலும், இதர பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த காவலர்கள் இதர பாராளுமன்ற தொகுதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தங்களுடைய தபால் வாக்குகளை செலுத்தினார்கள். இதுவரை 3288 நபர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு தினங்களில் தங்களது தபால் வாக்கினை அளிக்க தவறியவர்கள் (15.04.2024) அன்று தங்களது வாக்குகளை செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க தவறியவர்கள் (15.04.2024) அன்று மாநகர காவல் துறையினர். மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் மற்றும் புறநகர் காவலர்கள், பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் தோதல் செலவினங்களை கண்காணித்து ஒளிப்பதிவு செய்யும் அலுவலர்கள் இம்மையத்தில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார். தெரிவித்துள்ளார்.