மூன்று இலட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடிய நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

மூன்று இலட்ச ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை திருடிய நபர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, உத்தரவின்பேரில் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் வழிப்பறி, கொள்ளை, கூட்டு கொள்ளை செய்யும் குற்றவாளிகள் மீது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் மற்றும் சரக உதவி ஆணையர்கள் சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

கடந்த (14.01.24)-ந் தேதி கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சஞ்சீவி நகர் சென்னை பைபாஸ் ரோட்டில் மூன்று இலட்ச ரூபாய் மதிப்புடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் வாகனத்தை வழிப்பறி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்தும், அக்கம் பக்கம் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை செய்தும்

 சம்பவ இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவானைக்கோவில் பகுதியை சேர்ந்த சக்திவேல் (எ) சதீஸ் (22), த.பெ.பெரியண்ணன் மற்றும் 5 நபர்களை ஒன்று சேர்ந்து மேற்படி இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்ததாக தெரிய வந்து, எதிரிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் சக்திவேல் (எ) சதீஸ் என்பவர் மீது ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு ஒன்றும் நிலுவையில் இருப்பது தெரியவந்தும்,

அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் ந.காமினி, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி மாநகரில் இதுபோன்ற திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் விடுக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision