தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரண நிதி

தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.70 லட்சம் நிவாரண நிதி

திருச்சி மாநகர காவல் துறையில் அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீதர்(45). இவர், ஜூலை 30-ம் தேதி இரவு அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தில் பணியில் இருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதியதில் காயமடைந்தார். பின்னர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஸ்ரீதர் உயிரிழந்தார்.

தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியான ரூ.25,00,000/- உடனடியாக குடும்பத்தாரிடம் வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து பண பலன்களையும் துரிதமாக கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டது. மேற்படி இறந்து போன தலைமை காவலர்ஸ்ரீதரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, பாரத ஸ்டேட் வங்கியின் Police Salary Package- ன் கீழ் பணியின் போது விபத்தில் உயிர் இறந்தால் வழங்கப்படும் நிவாரணத்தை பெற்று தர உத்தரவிட்டதன்பேரில் வங்கி அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கைமேற்கொள்ளபட்டது.

அதன்படி, நேற்று(08.11.23)-ந்தேதி, மேற்படி இறந்து போன த.கா.ஸ்ரீதர்அவர்களின் குடும்பத்தினர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலத்திற்கு நேரில்வந்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களை சந்தித்து நிவாரண தொகையானரூ.70,00,000/- (எழுபது இலட்சம்)-ஐ பெற்றுத்தரப்பட்டது. இதில் திருச்சி மாநகர துணை ஆணையர் (தெற்கு) S. செல்வகுமார், பாரத ஸ்டேட் வங்கியின் திருச்சி மண்டல துணை பொது மேலாளர் நவீன்குமார், திருச்சி துணை பொது மேலாளர் மதன், திருச்சி முதன்மை வங்கி கிளை, துணை பொது மேலாளர் பிரபாகர் பாரிக் கலந்து கொண்டார்கள். மேலும் தலைமை காவலர் ஸ்ரீதரின் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலை கூறியும், திருச்சி மாநகர காவல்துறை சார்பில் அனைத்து விதமான உதவிகளும் செய்து தரப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துக்கொண்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய....

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision