தேர்தல் வந்ததால் விரைந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறுகிறார் - திருச்சியில் பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

தேர்தல் வந்ததால் விரைந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறுகிறார் - திருச்சியில் பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காந்தி மார்க்கெட் அருகில் மரக்கடை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசுகையில்... கேப்டன் உடல்நலத்துடன் உள்ளார். வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாகவும் கூறினார். யார் வெற்றி பெற்று வந்தால் உங்கள் வார்டுகளுக்கு நலத்திட்டங்கள் செய்வார்கள் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். பல உள்ளாட்சி பகுதிகள் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது. தேமுதிக வெற்றி பெற்றவுடன்,
காந்தி மார்க்கெட் பகுதியில் ஷேர் ஆட்டோ வசதி செய்தி தரப்படும்.

வெற்றி பெறும் முன்னரே பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்யும் தேமுதிக வேட்பாளர்கள், வெற்றி பெற்றால் இன்னும் பல நன்மைகள் செய்வார்கள். நாய் தொல்லையில் இருந்து மக்களை காப்பாற்றுவோம், திருச்சி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் நாய் தொல்லைகளால் மக்கள் அவதியுறும் நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து மக்களை பாதுகாப்போம்.

திமுகவும், அதிமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சொன்னதை செய்யும் கட்சியாக இருப்போம். பொய் வாக்குறுதிகளை கொடுக்க மாட்டோம். விரைவில் தேர்தல் வருவதால் விரைந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறுகிறார் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/DRORMqDXhcJ0Jtt5Nojgze

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn