திருச்சி மாநகராட்சியுடன் இணைய உள்ள 25 ஊராட்சிகளில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு 

திருச்சி மாநகராட்சியுடன் இணைய உள்ள 25 ஊராட்சிகளில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து பல்வேறு ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் மல்லியம்பத்து, மருதண்டகுறிச்சி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், முடிகண்டம், மேக்குடி, கே.கள்ளிக்குடி, தாயனூர், நாச்சிகுறிச்சி, சோமரசம்பேட்டை, நாகமங்கலம், புங்கனூர், பனையங்குறிச்சி, குண்டூர், நவல்பட்டு, சோழமாதேவி கீழக்குறிச்சி, தாளக்குடி, மாடக்குடி, அப்பாதுரை, எசனைக்கோரை, மாதவப் பெருமாள் கோவில், பிச்சாண்டார் கோவில், கூத்தூர் ஆகிய 25 ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது.

இதற்கிடையே ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்தால் வரி உயர்த்தப்படும், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ள 25 ஊராட்சிகளின் ஊராட்சி மன்றத் தலைவர்கள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட உள்ள லால்குடி மற்றும் முசிறி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஐந்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த கூட்டத்தில் மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக அரசுக்கு கருத்து அனுப்பும் வகையில் தொடர்புடைய ஊராட்சி மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn