பணத்திற்காக நிலத்தரகர் தம்பதியினரை காருடன் கடத்திய கும்பல்

பணத்திற்காக நிலத்தரகர் தம்பதியினரை காருடன் கடத்திய கும்பல்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆபீசர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (55). இவரது மனைவி சந்திரா (43) இருவரும் நிலத்தரகர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இருவரும் நேற்று சென்னை பொன்னேரி பகுதியில் நிலம் வாங்குவதற்காக அவர்களது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திருச்சி அருகே அடையாளம் தெரியாத  நபர்கள் இவர்களது காரை வழிமறித்து  இருவரையும் அடித்து கணவன் மனைவி சந்திராவை ஆகிய இருவரையும் இவர்கள் ஓட்டி வந்த இனோவா) காரில் ஏற்றிக்கொண்டு இருவரையும் மிரட்டி நீங்கள் சென்னைக்கு இடம் பதிவு செய்ய தானே போறீர்கள் என்றும் அந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால் இருவரிடமும் பணம் இல்லை என்று தெரிந்தவுடன் பணத்தை ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளனர். தனது மகன் கலைச்செல்வனிடம் நடந்ததை கூறி பணத்தை ஏற்பாடு செய்துள்ளனர். பணத்தை மணப்பாறையில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளார். கடத்தல் கும்பலிடம் கலைச்செல்வன் கூறியுள்ளார். பின்னர் தனது தாய் தந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். உடனடியாக மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான காவலர்கள் கடத்தல் கும்பலை பிடிக்க ஆண்டவர் கோவில் அருகில் காத்திருந்தனர். பணத்தை வாங்க வந்த கடத்தல் காரர்கள் காவலர்களை கண்டதும் வாகனத்தில் மாற்றுப் பாதையில் சென்றனர்.

இவர்கள் வாகனத்தை பின்னால் விரட்டிக் கொண்டு காவல் துறையினர் வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் நிலத்தரகருக்கு சொந்தமான சொகுசு காரை வையம்பட்டி அருகே நிறுத்திவிட்டு வேறு ஒரு வாகனத்தில் பழனியப்பன், சந்திரா இருவரையும் ஏற்றிக் கொண்டு திருச்சி வழியாக தோகைமலை சென்று கரூர் தப்பினர். இதனிடையே கலைச்செல்வத்திடம் பணம் வாங்குவதற்காக தோகைமலை அருகே காத்திருந்த துவாக்குடியைச் சேர்ந்த காளிதாஸ் (53) என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த நிலையில் கடத்தல் காரர்கள் நிலத்தரகர் மற்றும் மனைவியிடமிருந்து 10 சவரன் நகை, 40 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு காரில் இருந்து திண்டுக்கல் அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.

தம்பதியர் இருவரும் நேற்று இரவு காவல் நிலையம் வந்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் தப்பித்தவர்கள்  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி, ஆறாவயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் பிடிபட்ட காளிதாசிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn