தமிழகத்திற்கு வந்தால் எந்த வித சர்ச்சையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று திருச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தமிழகத்திற்கு வந்தால் எந்த வித சர்ச்சையும் இல்லாமல் செல்ல வேண்டும் என்று திருச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்க கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் .... கொரோனா நோய் தொற்று முற்றிலும் குறையவில்லை, அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். 12 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அதே போல 60 வயது மேல் இருக்கும் மேற்பட்ட முதியோர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அடுத்த அலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழக முதல்வர் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையுடன் ஜனாதிபதியை சந்திக்க உள்ளார். நீட் தேர்வு ரத்து செய்ய சாத்தியம் உள்ளதா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு... இதற்கு பதில் சொல்ல முடியாது. அரசியல் ரீதியாகவோ மற்ற மாநிலத்தை கவர்னரை பற்றியோ, அவருடைய அதிகாரத்தைப் பற்றியோ  சொல்வது சரியாக இருக்காது என்றார். தமிழகத்திற்கு வந்தால் எந்த வித சர்ச்சையும் இல்லாமல் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/C5AA6Sjfkat8YKKLO19KD9

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO