திருச்சியின்  பிரபல ஹோட்டலில் ரெய்டு -பரபரப்பு

திருச்சியின்  பிரபல ஹோட்டலில் ரெய்டு -பரபரப்பு

திருச்சி தில்லைநகர்,  கே.கே.நகர் ஆகிய இடங்களில்  வீடுகளிலும், திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் காமராஜ்யின் 30 ஆண்டுகால நண்பர் பாண்டியன். இவர் புதுக்கோட்டை மாத்தூர் பகுதியில் மெட்ரிக் இன்டஸ்ட்ரியின் உரிமையாளராகவுள்ளார்.

அவரது மனைவி தஞ்சை மாவட்டம் பூதலூரில் உள்ள நவீன அரிசி ஆலையின் பங்குதாரராக உள்ளார். இவர்களது வீடு, திருச்சி கே.கே.நகர் அய்யர் தோட்டம் இரண்டாவது தெருவில் உள்ளது. அங்கு திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர்  மணிகண்டன் தலைமையிலான போலீஸ்சார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல காமராஜ் அமைச்சராக இருந்த போது திருச்சி மத்திய பேருத்து நிலையம் அருகே சின்னச்சாமி உடையார் என்பவரிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹோட்டலை வாங்கி அதற்கு BLOSSOM என பெயர் வைத்து நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலில் கிருஷ்ணகிரி டி.எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே போல சின்னச்சாமி உடையாரின் மகன் இளமுருகு என்பவரது வீடு தில்லைநகர் 11 வது குறுக்கு தெருவில் உள்ளது. அங்கு லஞ்ச ஒழிப்பு துறை சென்னை ஆய்வாளர் விக்டர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.காலை 6.30 மணிக்கு துவங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO