ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு

ரங்கோலி கோலமிட்டு தேர்தல் விழிப்புணர்வு

பாராளுமன்ற தேர்தல் 2024-ஐ முன்னிட்டு திருச்சிராப்பள்ளி ஹோலி கிராஸ் கல்லூாயில் சமூக நலத்துறையின் சார்பில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில்  மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இன்று (04.04.2024) வண்ண பலூன்களை பறக்க விட்டும், கையெழுத்து பலகையில் முதல் கையொப்பமிட்டு தேர்தல் விழிப்புணர்வை தொடங்கி வைத்தார்.

100 சதவிதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியை திருநங்கையர் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தலைமையில் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் Vote 100% எனும் வடிவில் நின்றும், ரங்கோலி கோலம் வரைந்தும் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision