சந்தானம் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

சந்தானம் வித்யாலயா பள்ளி ஆண்டு விழா

சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் 11 வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது பள்ளி செயலாளர் மீனா தலைமை செயல் அதிகாரி சந்திரசேகர் தலைமை வகித்தனர்.

பள்ளி தலைவர் தோட்டா ராமானுஜம் இயக்குனர் அபர்ணாஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 பள்ளி முதல்வர் பொற்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார்.

 சென்னை ஐகோர்ட் நீதிபதி சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி பேசுகையில்,

ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை மாணவர்கள் கவனமாக உள்வாங்க வேண்டும் ஆசிரியர்களும் தாங்கள் சொல்லிக் கொடுத்ததை மாணவர்கள் புரிந்துகொண்டனரா என்பதை உறுதி செய்த பின்னரே அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும்.

 வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்றார்.

பிளஸ்டூ மாணவர் மனோஜ் ஒட்டுமொத்த சிறந்த மாணவர் கேடயத்தையும்,பத்தாம் வகுப்பு மாணவி அதுல்யா ஆல்ரவுண்டர் கேடயத்தையும் பெற்றனர்.

 துணை முதல்வர் ரேகா ஆசிரிய ஆசிரியைகள்,பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...

https://t.co/nepIqeLanO