பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி பள்ளியில் சத்துணவை சாப்பிட்டு திடீர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி பள்ளியில் சத்துணவை சாப்பிட்டு திடீர் ஆய்வு

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி பகுதியில் மருங்காபுரி ஒன்றியத்தில் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வகுப்பறைகளில் படித்துக்கொண்டிருந்த மாணவர்களிடம் அவர்களின் படிப்பு சம்பந்தமாக அவர்களிடம் கலந்துரையாடி அதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டு பள்ளிக்கு அருகாமையில் இருந்த கழிப்பிடத்தை ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சத்துணவு கூட்டத்திற்கு வந்த அமைச்சர் சத்துணவு கூடத்தில் தயார் செய்யப்பட்டிருந்த லெமன் சாதத்தை ருசித்துப் பார்த்தார். சாதத்தின் தரம் குறித்தும் சாதத்திற்கு குழந்தைகளுக்கு துணையாக வழங்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GdOnszdmVBK09MdCZKglbZ

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn