திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள கடைக்கு சீல்

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் உள்ள கடைக்கு சீல்

திருச்சி நந்தி கோயில் பகுதியில் இயங்கி வந்த செல்வி புக் மற்றும் ஜெனரல் ஸ்டோர் கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

10.08.2021 அன்று நடத்திய ஆய்வில் அவரது கடை மற்றும் வீட்டில் 128 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை அறிந்து சட்டபூர்வ உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன.

மேலும் அவர் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 10.12.2021 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதுவும் அவரால் செலுத்தப்பட்டது.

மேலும் அன்றைய தினம் அவசர அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் அவசர தடை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த வணிக கடைக்கு சீல் செய்யப்பட்டது.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடைக்கு சீல் செய்யப்படும் என மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn