திருச்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

திருச்சியில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம்

கால்நடை பராமரிப்பு துறை திருச்சி கோட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்பில் புதன்கிழமை அன்று தேவராயநேரி பகுதியில் கால்நடைகளுக்கு இலவசமாக சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தால் குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல் நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல் சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல் போன்றவை மேற்கொள்ளப்படும்.

இம்முகாமில் கன்று பேரணி நடைபெற உள்ளது கலந்துகொள்ளும் சிறந்த கிடாரி கன்று தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மை விருதுகளும் வழங்கப்படும் அதனோடு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் துறை சார்ந்த கண்காட்சியும் நடைபெறும்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Eyd4BfTFH1SEyxmvvYevul

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn