விளையாட்டு பொருட்களில் தங்கம் பறிமுதல்

விளையாட்டு பொருட்களில் தங்கம் பறிமுதல்

திருச்சியில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் உள்ளன. இதேபோல் பல்வேறு நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் சந்தேகத்திற்கு இடமான இருந்த ஒரு ஆண் பயணியின் உடமைகளை சோதனை செய்தபோது, காப்பிதூள் பவுடர், சமையலறை பொருட்கள், குழந்தை விளையாட்டு பொருட்களில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து 273.5 கிராம் எடையுள்ள 17 லட்சத்து 39 ஆயிரத்து 460 மதிப்புள்ள தங்கத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision