அண்ணாமலையுடன் 'செல்பி' ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர் !!

அண்ணாமலையுடன் 'செல்பி' ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட காவலர் !!

தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, 'என் மண் என் மக்கள் யாத்திரையை நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி ஊட்டியில் யாத்திரையில் பங்கேற்றார். ஊட்டியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் 'ஹில் காப்' போலீசார் ஈடுபட்ட்டு வந்தனர். அவர்கள் பைக்கில் ரவுண்ட் அடித்து, போக்குவரத்து ஒழுங்கை சரிசெய்து வந்தனர் அந்தப்பணியில் இருந்த போலீஸ்காரர் கணேசன் சீருடையுடன், அண்ணாமலையுடன் செல்பி எடுத்தார். அந்தப் போட்டோ, பேஸ்புக் உட்பட சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ்காரர் கணேசனை, ஆயுதப்படைக்கு மாற்றி, நீலகிரி எஸ்பி பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.