திருச்சியில் சாக்கடையில் விழுந்து 5 வயது சிறுவன் பலி!!

திருச்சியில் சாக்கடையில் விழுந்து 5 வயது சிறுவன் பலி!!

திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய 5 வயது மகன் யஸ்வந்த் நேற்று மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரை காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர்.‌ எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது வீட்டின் அருகில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் சிறுவன் இறந்து கிடந்தது தெரியவந்தது.

Advertisement

இதனையடுத்து சிறுவனின் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யஸ்வந்த்தின் தாய் நளினி கொடுத்த புகாரின் பேரில் தில்லை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .