கஞ்சா விற்பனை செய்த அக்கா - தங்கை கைது - 4 கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனை செய்த அக்கா - தங்கை கைது - 4 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்110 கிலோ கஞ்சா வழக்கில் போலீசார் இரண்டு பெண்களை பல மாவட்டங்களில் தேடி வந்தனர். இவர்களை பல்வேறு மாவட்டங்களில் புதுக்கோட்டை போலீசார் தேடி வந்த நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் இரண்டு பெண்கள் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்து வருவதாக புதுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் போலீசார் உதவியுடன் அங்கு சென்ற போலீசார், மண்ணச்சநல்லூர் அழகு நகரில் சந்தேகத்திற்கு இடமாக தங்கி இருந்த இரண்டு பெண்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். புதுக்கோட்டை போலீசாரால் தேடி வந்த 110 கிலோ கஞ்சா வழக்கில் இவர்கள் இரண்டு பேரும் தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரிகள் ஆன புதுக்கோட்டை மாவட்டம் கோவில்பட்டி மிலிட்டரி காலனியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் இவரது மனைவி வசந்தி (56), நாராயணன் இவரது மனைவி வனிதா (51) என தெரிய வந்தது,இவர்கள் இருவரும் அக்கா- தங்கைகள் ஆவார்கள்.

மேலும் விசாரணையில் இவர்கள் இரண்டு பேரும் ஆந்திரா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதை மண்ணச்சநல்லூர், நம்பர் 1 டோல்கேட், சமயபுரம் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றி புதுக்கோட்டை போலீசாரிடம் மண்ணச்சநல்லூர் போலீசார் ஒப்படைத்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision