குளத்து மண் கடத்தல் - வண்டிய மறித்து பொதுமக்கள் போராட்டம்

குளத்து மண் கடத்தல் - வண்டிய மறித்து பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு பாப்பான்குளத்தில் மண் அள்ளி வடக்கு பாகனூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மண் விற்பனை செய்வதாக புகார். இதனையடுத்து பாகனூர் பகுதியில் உள்ள மக்கள் வண்டியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபொழுது தனக்கு ஒன்றும் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார். வடக்கு பாகனூர் மக்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். யார் இந்த மண் திருட்டில் ஈடுபடுவது என விசாரித்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இப்பகுதியிலுள்ள அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருப்பதாக பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனடியாக மாவட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision