திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 24 முதல் கோடைகால சிறப்பு பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் மே 24 முதல் கோடைகால சிறப்பு பயிற்சி

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சிகள் மே 24ஆம் தேதி தொடங்குகின்றன. மாணவ - மாணவிகள் கோடைவிடுமுறையை பயனுள்ளதாக ஆக்கும் வகையில் வாசகர் வட்டத்துடன் இணைந்து சிறப்பு பயிற்சிகளை மாவட்ட மைய நூலகம் அளிக்க உள்ளது. அரசங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் கே அருணபாலன் பயிற்சி வகுப்புகள் எடுக்க உள்ளார். 

குழந்தைகளுக்கான ஓரிகாமி பாப்ஆப் கலைவடிவம் பயிற்சி மே 24 முதல் 26 வரை காலை 10 மணி முதல் 12 மணிவரை நடைபெறுகிறது. இந்த பயிற்சிக்கு தேவையான சார்ட், A3 டபுள் சைடு கலர் பேப்பர் பேப்பர், பெவிக்கால், கத்தரிக்கோல், ஸ்கெட்ச் பேனா போன்றவற்றை மாணவ - மாணவிகளே எடுத்து வர வேண்டும்.

3 நாள் பயிற்சியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் தங்கள் பெயரை பதிவு செய்ய மாவட்ட மைய நூலக தொலைபேசி எண்ணில் 0431-2702242 தொடர்பு கொள்ளலாம். பயிற்சிக்கு அனுமதி இலவசம் மூன்று நாள் நடைபெறும் பயிற்சி பட்டறையில் குழந்தைகள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நூலக அலுவலர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMt

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO