திருச்சியில் நாளை (23.08.2022) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 

திருச்சியில் நாளை (23.08.2022) குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பைன்  நீர்ப்பணி நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வேல் நீரேற்று நிலையம், கலெக்டர் அய்யாளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையம் மற்றும் ஜீயாபுரம் - பிராட்டியூர் கூட்டு குடிநீர் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்திடும் கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மின் வாரியத்தால் மாதாந்திர பராமரிப்பு பணி (23.08.2022) நாளை 9.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளிலும், டர்ப்பைன் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் மலைக்கோட்டை மற்றும் சிந்தாமணி ஆகிய பகுதிகளிலும், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் தில்லை நகர், அண்ணாநகர் காஜாபேட்டை, கண்டோன்மெண்ட், ஜங்ஷன், உய்யக்கொண்டான் திருமலை, தெற்கு இராமலிங்க நகர், அண்ணா நகர், ஆல்ஃபா நகர், பாத்திமா நகர், கருமண்டபம் மற்றும் கல்லாங்காடு ஆகிய பகுதிகளிலும் 

கலெக்டர் வெல் அய்யாளம்மன் படித்துறை நீர்ப்பணி நிலையத்தில் அடங்கும் புகழ் நகர், பாரி நகர், எல்லைக்குடி, காவிரி நகர், கணேஷ் நகர், சந்தோஷ் நகர், ஆலத்தூர், கல்கண்டார் கோட்டை, திருவள்ளுவர் நகர், திருவரம்பூர் ஒன்றிய காலணி மற்றும் பிராட்டியூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் அடங்கும் ராம்ஜிநகர், பிராட்டியூர், எடமலைப்பட்டிபுதூர் விஸ்வாஸ் நகர், ஜெயா நகர் மற்றும் பிராட்டியூர் காவேரி நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை (23.08.2022) ஒருநாள் குடிநீர் வினியோகம் இருக்காது.

நாளை மறுநாள் (24.08.2022) முதல் வழக்கம் போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தை பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO