திருச்சி அருகே படுகாயங்களுடன் உயிர் தப்பிய பசுமாடு!

திருச்சி அருகே படுகாயங்களுடன் உயிர் தப்பிய பசுமாடு!

திருச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் பசுமாடு ஒன்று உயிர் தப்பியுள்ளது.

Advertisement

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி எல்லை முடிவு சோதனைச்சாவடி அருகே விபத்தில் சிக்கி பசுமாடு ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் பசுமாட்டை மீட்டனர்.

இதுகுறித்து விசாரித்தபோது சென்னையிலிருந்து தஞ்சாவூர் வந்த தம்பதியினர் திரும்பி திருச்சி வரும்போது மழை பெய்ததால் சாலையின் குறுக்கே பசுமாடு வந்ததாகவும், கார் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Advertisement

காரின் முன் புறம் முழுவதும் சேதமடைந்த நிலையில் பசுமாடு பலத்த காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டது. மழை பெய்யும் நேரங்களில் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பொறுமையாக சென்றால் இதுபோல் விபத்துகளில் இருந்து தவிர்க்கலாம்.