பஞ்சப்பூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்தது - ஒரே இடத்தில் 4வது முறை விபத்து

பஞ்சப்பூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்தது - ஒரே இடத்தில் 4வது முறை விபத்து

கர்நாடகாவைச் சேர்ந்த டேங்கர் லாரி பென்னாகரத்தில் இருந்து 40 டன் சிமெண்ட் ஏற்றுக்கொண்டு தூத்துக்குடி துறைமுகம் நோக்கி சென்றது. அப்போது திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் டேங்கர் லாரி வந்த கொண்டிருந்த போது அங்கிருந்த

வாகன சோதனை சாவடி முன்பாக வைக்கப்பட்டிருந்த, வாகன வேக குறைப்பு தடுப்புகளை டேங்கர் லாரி உடைத்து சேதப்படுத்தி கவிழ்ந்துள்ளது. இதில் லேசான காயங்களுடன் டேங்கர் லாரி ஓட்டுநர் சதீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், ஒரு வழி பாதையில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதால் போக்குவரத்து சீரானது. கடந்த ஒரு வாரத்தில் ஆக்ஸிஜன் வாயு ஏற்றி வந்த லாரி,  பார்சல் சர்வீஸ் லாரி என நான்கு விபத்துக்கள் இந்த இடத்தில் நடந்துள்ளது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn