கடும் வெயிலை கருதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வரி வசூல்

கடும் வெயிலை கருதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வரி வசூல்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களுக்கு தீவிர வரிவசூல் பணி நடைபெற்று வருகிறது. (2023-2024) ஆம் ஆண்டு முடிய செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், காலிமனைவரி, புதைவடிகால் சேவை கட்டணம், தொழில்வரி மற்றும் வரியில்லா இனங்கள் (கடை வாடகைகள்) உடனடியாக செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், மாநகராட்சி வார்டுகுழு அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு வரிவசூல் மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டுகுழு அலுவலகங்களில் உள்ள வரி வசூல் மையங்களில், பொதுமக்களின் வசதிக்காகவும், 

தற்போது கோடைகால மாதங்களில் நிலவும் தட்பவெட்ப நிலை மற்றும் பொதுமக்களின் அன்றாட பணிநேரத்தினை கருத்திற்க்கொண்டும், பொதுமக்களின் வசதிக்காக வரிவசூல் மையங்களின் பணி நேரத்தினை காலை 08:00 மணிமுதல் மாலை 08:00 மணி வரை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி காலை மற்றும் மாலை வேலையிலும், தங்களுக்கான வரியினை நிலுவையின்றி செலுத்தி பயன்பெறுமாறு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

.