39 தொகுதிகளிலும் வெற்றி பெறமுடியும் என பாஜக தலைவர் கூறியது கனவில் மட்டுமே நடக்கும்-எம்.பிதிருநாவுக்கரசர் பேட்டி

39 தொகுதிகளிலும் வெற்றி பெறமுடியும் என பாஜக தலைவர் கூறியது  கனவில் மட்டுமே நடக்கும்-எம்.பிதிருநாவுக்கரசர் பேட்டி

மக்களவை திருச்சி தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்...

தடைபட்டுள்ள திருச்சி ரயில்வே சந்திப்பு மேம்பாலத்தின் நிறைவு பணிகள் இன்னும் ஆறு மாதத்தில் முடிவடையும். பின்னர் மக்கள் பயன்பாட்டிற்கு தரப்படும்.

கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் 39 திலும் வெற்றிபெர முடியும் என பாஜக தலைவர் கூறியுள்ளார். அவர் கனவு காண யாரும் தடைபோட முடியாது. எதார்த்தத்தில் அது நடப்பதற்கு வாய்ப்பில்லை. பாவம் கணவாவது காணட்டும்.

ஆதீனங்கள் அரசியல் பேசலாம். அதற்கு யாரும் தடை போடவில்லை. மக்களைப் பிளவு படுத்தும் விதத்தில் ஆதீனங்கர்த்தாக்கள், சர்ச் மற்றும் பள்ளிவாசல் உள்ளிட்ட அமைப்பினர் பேசக் கூடாது.

கருத்துச் சுதந்திரம் என்பது அடுத்தவர் மூக்கு நுனி வரை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சாதி,  மதம் இவற்றால் மக்களை பிளவுபடுத்தி வன்முறையை ஏற்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது. வரம்பு மீறாமல் நாகரீகம், கலாச்சாரத்தை பாதுகாக்கும் விதத்தில் பேச வேண்டும் என திருச்சியில் மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் பேட்டியளித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO